Posts

மாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்நூறு துதிகள்

Image
மாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்நூறு துதிகள் 1 பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​ 8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 9 இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளு...

பைபிள் மாந்தர்கள்

Image
🍇🌿🍇🌿🍇🌿🍇🌿 *"யோவாபு"* யோவாபு தாவீது மன்னனின் சகோதரி செரூயாயின் மகன். தாவீது அவனை படைகளுக்கெல்லாம் தலைவனாக வைத்திருந்தார். மிகச்சிறந்த வீரனான இவனுடைய தலைமையின் கீழ் தாவீது தோல்வி என்பதே அறியாத மன்னனாய் இருந்தார். அரசவையில் மிகவும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இருந்தார் யோவாபு. அபிசாயி, அசாகேல் என அவனுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இருவருமே சிறந்த வீரர்கள். அவர்களில் அசாகேலை தாவீதின் படைவீரன் அப்னேர் கொலை செய்தான். அந்தப் பகையை மனதில் சுமந்து திரிந்த யோவாபு, பிறிதொரு காலத்தில் தாவீதின் அறிவுரையையும் மீறி அப்னேரைக் கொன்றான். தாவீதின் மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிராக எழுந்தபோது இளவரசர் என்றும் பாராமல் சாகடித்தான். தாவீது மன்னனின் கட்டளையை மீறி இந்த செயலைச் செய்தான். அதைக் கேள்விப்பட்டு மன்னன் கலங்கிப் புலம்பியபோது மன்னனின் முன் நேரடியாகச் சென்று அவரைக் கடிந்து கொள்ளுமளவுக்கு செல்வாக்கோடு இருந்தான் யோவாபு. தாவீது மன்னன், உரியாவின் மனைவி பத்சேபாவின் மேல் மோகம் கொண்டு மயங்கிய போது உதவிக்கு வந்தவன் யோவாபு தான். நயவஞ்சகமாய் உரியாவை போர்க்களத்தில் சாகடித்தவன் அவன். அப்ப...

*💒✝️ ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் ஜெபம்.!*🧎‍♂️

Image
*💒✝️ ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் ஜெபம்.!*🧎‍♂️ ✝️🌹✝️🌹✝️🌹✝️🌹✝️ 🌹✝️💒 என் ஆன்மாவைத் திருமுழுக்கினால் தூய்மையடையச் செய்த பரிசுத்த ஆவியே! என் இதயத்தை என்றும் உமக்கு ஏற்புடைய இல்லமாக்கியருளும்.🧎‍♂️  🌹✝️💒 உறுதிப் பூசுதலின் வழியாக என் இதயத்தைத் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே ! உலகம், உடல், அலகை ஆகிய என் ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.🧎‍♂️ 🌹✝️💒 உலக சிற்றின்பங்கள் என் ஆன்மாவை சிறைப்பிடிக்காமல் என்னைப் பாதுகாத்தருளும்.🧎‍♂️ 🌹✝️💒 செபம், தவம் இவற்றில் நான் அன்றாடம் நிலைத்திருந்து என் ஆன்ம எதிரிகளை வெற்றிகொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.🧎‍♂️ 🌹✝️💒 என் ஆன்மா இழந்து போன அருளை பாவ மன்னிப்பு என்னும் திருவருட் சாதனத்தின் வழியாகத் திருப்பிக் கொணரும் பரிசுத்த ஆவியே! என் பலவீனமான ஆன்மாவிற்கு வலுவூட்டி, பாவச் சேற்றில் என் ஆன்மா புதைந்து விடாதபடி என் ஆன்மாவைப் பாதுகாத்தருளும்.🧎‍♂️ 🌹✝️💒 சோதனை வேளையில் என் ஆன்மாவின் பகைவரை வென்றிட எனக்கு ஆன்ம பலன் தாரும்.🧎‍♂️ 🌹✝️💒 பரிசுத்த கன்னி மரியாவின் பரிசுத்த உடலிலிருந்து இயேசுவின் திருவுடலை உருவாக்கிய பரிசுத்த ஆவ...

*† இரவு செபம் †*

Image
*† இரவு செபம் †* தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக.. அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடுக்கின்றாய். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை புகழ்கின்றோம். உமது வல்லமையும் பாதுகாப்பும், இரக்கமும், அருளும் எங்கள் வாழ்வையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்க, ஆளுகை செய்ய உருவாக்க, உருமாற்ற உடனிருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன்மீது அன்பு செலுத்த.. அப்பா எங்கள் மீது நாங்கள் அன்பு கூறுவதுபோல, எங்களுக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறவும் கற்றுக் கொடுத்தீரே.. எங்கள் வாழ்வை உருவாக்கினீரே.. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் வளர்க்க, தெய்வமாய் எங்களுக்கு துணையாய் இருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்! இந்த நாள் முழுவதும் உம்முடைய அருள் கொடைகளால், எங்கள் வாழ்வை நிரப்பினீரே.. ஆசீர்வாதத்தின் பிரசன்னத்தில் எங்களை உருவாக்கினீரே.. உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா! இந்த இரவுப் பொழுதை ஆசீர...

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எப...

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்I am still breaking Lord still breaking

Image
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே

இன்றைய மன்னா

Image
*DAILY MANNA:* *மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.* *எபேசியர் 4 : 2-3* ✅ மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புங்கள்.  தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை பெறக் காத்திருங்கள்.  நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்,  உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார் தேவன்,  கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு புனிதமான வாழ்க்கையாகும், அன்பு நிறைந்த ஸ்நேகத்தின் வாழ்க்கையாகும், யாவரையும் அரவணைத்து போ...

போர் வீரரான விமாணியை காப்பாற்றிய ஜெபமாலை!

ஒரு முறை ஐந்து போர் விமானங்கள் ஆள் நடமாட்டமில்லா அடர்ந்த காட்டில் விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த ஐந்து போர் வீரர்களும் விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நம்பப்பட்டது.  அந்த வீமானத்தையும், அவர்கள் சடலத்தையும் தேடும் பணி துதிரிதப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் அந்த இடத்தை அடைந்தார்கள். ஐந்து விமானங்களும் நொறுங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு காத்து இருந்தது. ஒரே ஒரு போர்வீரர் விமானி மட்டும் உயிருடன் இருந்தார். மற்ற நான்கு வீரர்களும் இறந்திருந்தனர். அவர்கள் ஆச்சரியம் மிகுந்தது. எப்படி இந்த ஆள் இல்லா அடந்த காட்டில் தண்ணீர், உணவு இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்தான் அதிலும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. “நான் இவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ்ந்ததிற்கு நான் சொல்லிய ஜெபமாலையே காரணம். எனக்கு இங்கே நீரும் இல்லை. உணவும் இல்லை. ஆனாலும் நான் விடாமல் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு ஜெபமாலையே நீரும் உணவுமாகியது. நான் இடைவிடாமல் சொல்லிய ஜெபமாலையே என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு காப்...

தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும் போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? (லூக்கா நற்செய்தி 18:7)

Image
"கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை" என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவர் கேட்கச் சொன்னது நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளை. நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளைக் கேட்டால் இயேசு கட்டாயம் கொடுப்பார், கொடுக்க வேண்டிய நேரத்தில். நாம் நமது உடல் சார்ந்த உதவிகளைக் கேட்டாலும் கொடுப்பார், அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்குமானால். நம்மிடம் வேண்டாத குணம் ஒன்று இருக்கிறது, கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும். அதிசயப் பிறவி ஒருவன் அம்மாவிடம் கேட்டானாம்,  '"அம்மா, எனக்கு ஒரு மகன் வேண்டும்." ''அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்.'' "முடித்தால்?" "கட்டாயம் கிடைக்கும்." "அப்போ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்" கல்யாணம் முடிந்தது. முதல் இரவில் மனைவியிடம் கேட்டான், ''இப்போ எனக்கு ஒரு மகன் வேண்டும்." "அதற்கு குறைந்து பத்து மாதங்கள் வேண்டும்." "அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடிந்தா...

உத்தரிக்கிற ஸ்தலம் - காரணம்

Image
தேவ பயமுள்ள மக்கள் சாவான பாவத்தை விலக்க - கடுமையாக முயல்கிறார்கள். என்றாலும் அற்பப் பாவங் களை எதிர்த்து நிற்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவையும் கடவுளால் தண்டிக்கப்படுகின்றன. "மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வீணான வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளிலே கணக்குச் சொல்வார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று சேசு கூறுகிறார் (மத்.12:36). அப்படியிருக்க, ஓர் அயலான் அல்லது ஒரு நண்பனுடைய குற்றத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, நாம் ஏன் அவனுக் காக ஒரு ஜெபம் செய்யக் கூடாது? உண்மையான கிறீஸ் தவ பிறர் சிநேகம் , யாருடைய நற்பெயரையும் கெடுப் பதையோ, அதற்கு எதிராக அவதூறு பேசுவதையோ தடை செய்கிறது. "அது உண்மை என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி, உன்னையே நியாயப்படுத்திக் கொள்வது, சாத்தானின் புத்திசாலித்தனமான ஒரு தந்திரமாக இருக் கிறது. இப்படிப்பட்ட அற்பப் பாவங்கள் ஒரு நல்ல உத்தம மனஸ்தாப மந்திரத்தால், அல்லது ஒரு தவச் செயலால், அல்லது பாவசங்கீர்த்தனத்தில் மன்னிக்கப்படுகின்றன என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இந்தப் பாவங்களுக்கு முழுமையாகப் பரிகாரம் செய்வதற்கு முன், அல்லது அப்படிச...