அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் இப்போது உன்னைத் தேடி வந்தேன்|| Appa Un Pillai Thavaru Seithen
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrzjAMnHO9nr3Nxp0FQhPMYTz24ScA-4Bs5oPnvYAW70FtLDcZVD2zm6jWKQi9ZDKfvzEjL-GtCEkyXD_GLnrfbiBZ441Sza0w6lY7IdOGEL75k9CSrWfcN2sKuAYWELl3zvA6WB6Cit5z/s1600/1672741031039135-0.png)
அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் இப்போது உன்னைத் தேடி வந்தேன் இறைஞ்சுகிறேன் இரக்கம் வையும் ஏற்றருளும் இறைவா 1. செல்வத்தைப் புகழ்ந்தேன் ஏழ்மையை இகழ்ந்தேன் உன்னை இழந்தேன் ஊதாரி ஆனேன் (2) பெற்றோரின் பெருமையை மறந்தே திரிந்தேன் -2 பாவங்கள் அனைத்திலும் உழன்றே நொந்தேன் 2. தந்தை உன் அன்பை ஏற்றிட மறந்தேன் மந்தையைப் பிரிந்த செம்மறி ஆனேன் (2) நிந்தனை புரிவோர் வழியில் கலந்தேன் -2 உந்தனை நினைத்தேன் திரும்பி வந்தேன் 3. பாவத்தின் சுமையை இன்றுதான் உணர்ந்தேன் பண்புள்ள தந்தாய் அண்டி வந்தேன் (2) கதியென்று செல்ல வேறிடம் இல்லை -2 கையேந்தி கேட்கிறேன் உந்தன் பிள்ளை