தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் - Thooyaadhi thooyavarae – umadhuPugazhai, naan paaduvaen
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி