ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம், Aairam Varudangalai Yem Andavarey Ummai Yethirpaathom
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர் ஓசான்னா தாவீதின் புதல்வா ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே மாமுனி சூசை கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தினில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா 2. தாவீது அரசரின் புத்திரரே ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம் தேவனே தேவனே வருவீரே - ஓசான்னா 3. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா அருள் தபோதனரால் புகழப்பட்டீர் ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம் ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர் 4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர் கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக் கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் 5. புவனியிற் புரிந்தீர் புண்ணியங்கள் - எம் புத்தியிற் புகுத்தினீர் அருள்மொழிகள் பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா பவனியோடு வாரீர் படைத்தவரே 6. மரித்தவர் பலருமே உயிர்பெற்றார் - ஒரு மனமுடை விதவை மகன் அடைந்தார் மரிமதலேன் சோதரன் பெற்றார் - எம் மனுக்குலம் இரட்சிக்க வந்த...