ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன், Aatkonda Theyvam Thiruppaatham Amarnthu Aaruthal Ataikinten Amaithi Perukinten
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே