Posts

Showing posts from March, 2021

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் ||Kattadam Kattidum Sirpigal

Image
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் கைவேலை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய் இயேசுவின் வார்த்தைக் கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார்

Magilvom Magilvom - மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Yaridam Selvom Iraivaa - யாரிடம் செல்வோம் இறைவா

Image
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா    (4) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தர வேண்டும்    (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2) ஆதரித்தே அரவணைப்பாய்    (2) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா  (2) குணமதிலே மாறாட்டம்  (2) குவலயந்தான் இணைவதெப்போ   (2) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2) உலகிருக்கும் நிலை கண்டு      (2) உனது மனம் இரங்காதோ       (2)