ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம், Aairam Varudangalai Yem Andavarey Ummai Yethirpaathom

ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்
ஓசான்னா தாவீதின் புதல்வா ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே
மாமுனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தினில் உதித்தவரே எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா

2. தாவீது அரசரின் புத்திரரே ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசான்னா

3. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர் 
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர்

4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்

5. புவனியிற் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியிற் புகுத்தினீர் அருள்மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே

6. மரித்தவர் பலருமே உயிர்பெற்றார் - ஒரு
மனமுடை விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

7. குருடர் அநேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாருமே நீர்

8. யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூத ராஜனாய் முடிபெற்றீர் 
எருசலேம் நகர்தனிற் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

9. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

10. கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

11. உலகமே நுமது அரிய வேலை - எம்
உயிருமே நுமது மா புதுமை
உலகத்தை யாண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே

 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு