Posts

மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்

Image
1. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியே நிலைநாட்டுங்கள்,  நேர்மையைக் கடைப்பிடிய்ங்கள்;  நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது;  நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். 2. இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்;  ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து;  எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். 3. ஆண்டவரோடு தம்மை இணைத்துக் கொண்ட பிற இனத்தவர், தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி என்று சொல்லாதிருக்கட்டும். எசாயா 56 1 முதல் 3 முடிய

அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான்

Image
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே 6. அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா 8. யேகோவா ஷாலோம் சாமாதானம் தருகிறீர் சாமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம் சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன்என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன்

Image
1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்

Image
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே

அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார்.

Image
அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார் அவர் கைக்கும் எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

அதி-மங்கல காரணனே துதி-தங்கிய பூரணனே

Image
அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி-மங்கின எங்களுக்கும், திதி-சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே - அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும், மிகு-உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்? - அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ? - அதி-மங்கல

புனித யூதா ததேயுவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

Image
 ✝️🌹மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுவே🧎‍♂️  ✝️🌹எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே🧎‍♂️  ✝️🌹புண்ணியங்கள் மின்னித் துலங்கும் தூயவரே🧎‍♂️  ✝️🌹புதுமை வரங்களில் சிறந்தவரே🧎‍♂️  ✝️🌹தம்மை தேடி வந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே🧎‍♂️  ✝️🌹உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம்.🧎‍♂️ ✝️🌹இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்🧎‍♂️  ✝️🌹இதய பூர்வமான நன்றி நவில்கிறோம்.🧎‍♂️ ✝️🌹எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்🧎‍♂️  ✝️🌹சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.🧎‍♂️ *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* ✝️🌹நேசிக்கப்படத் தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர் பெற்று இயங்கும் தயாள இருதய புனித யூதா ததேயுவே 🧎‍♂️ ✝️🌹உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போக விடாதேயும்.🧎‍♂️ ✝️🌹யூதாசின் பெயர் ஒற்றுமையால் உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் ...

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே

Image
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளேநல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்

Image
1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர், உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர். எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. 4. வாலிபர் நெறி தவறாமலும், ஈனர் இழிஞரைச் சேராமலும், ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே நல் சேவை செய்ய நீர் அருள்வீரே. 5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய் காரும், உம் பலம் ஆறுதல் தாரும் நோயுற்றோர் பலவீனர் யாரையும் தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும். 6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும் அன்பாய் அணைத்து ஆதரித்திடும் அவரைக் காத்து அல்லும் பகலும். 7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர, ஆவியில் அன்பில் என்றும் பெருக, எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள் இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

Image
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே (2) இடம் அசைய உள்ம் நிரம்ப இறங்கி வாருமே(2) பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே (2) கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே (2) அசைவாடும்... தேற்றிடுமே உள்ங்களை இயேசுவின் நாமத்தினால் (2) ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் (2) அசைவாடும்... துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் (2) நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே (2) அசைவாடும்...