Posts

Showing posts from February, 2021

தேவசாகயம் மவுன்ட் புகைபடங்கள்

Image

அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்

தூய அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்       எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மின்னல் மாதாவே! ஒளி வெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கு, ஆதரவற்றோர்க்கு அடைக்கல பாதையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும் தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடி வரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் எம் உள்ளழரை ஆமேன் !

ஏ அம்மா என் தாயே மாசில்லாத கன்னிகையே Ye Amma Yen Thaey Masillatha Kannikaiyae

Image
ஏ அம்மா என் தாயே மாசில்லாத கன்னிகையே அறியா பிழையை கருணையோடு மன்னித்து அருள்வாய் தயாபரி தங்கத்திலான உப்பரிகை தாவீது வம்சத் தாய்மடி சாரோனின் ரோஜாத் தோட்டம் நீ ஆசிர்வதியும் அம்மா ஆவியகன் உன்னதமே ஆதிநாதன் ஆலயமே செங்கோலை ஏந்தும் விண்ணரசி ஆசிர்வதியும் அம்மா தேவனின் தாயும் நீ ஜீவனின் ராணி நீ தாயான கன்னி மாமரி ஆசிர்வதியும் அம்மா

நீயே நிரந்தரம் இயேசுவே ||Neeye Nirantharam

Image
நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் 3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ் Arokkiya Mathave Umathu Pugazh

Image
ஆரோக்கிய மாதாவே உமது புகழ்  பாடித் துதித்திடுவோம் -எந்நாளும் பாடித் துதித்திடுவோம்  (2)  அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே வசித்திட ஆசை வைத்தாயே  (2) பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட அனைவருக்கும் துணை புரிந்தாயே  (2)  தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும் வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே  (2) வானுலகும் இந்த வையகமும்  -அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே  (2) முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன் குறைகளை நீக்கிட நினைத்தாயே  (2) நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும் இயேசுவின் அருளால் கொடுத்தாயே  (2)  பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே பசும்பால் வாங்கித் தந்தாயே  (2)  -இந்த உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும் அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)  சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால் சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே  (2) பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர் வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே  (2)  கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின் கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே   (2)  -நமது நன்னாளில் வந்து தானங்கள் ச...

நீயே எனது ஒளி நீயே எனது வழி ||Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi|Chitra Songs

Image
நீயே எனது ஒளி நீயே எனது வழி நீயே எனது வாழ்வு இயேசையா – (2) நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள் நன்மை என்ன தீமை என்ன அழியாத கோலங்கள் – (2) நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையில் பொருளாவாய் – (2) உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள் அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் கோலங்கள் தட்டுத் தடுமாறி விழத் தகுமான சூழல்கள் – (2) நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய் – (2) உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே

Umathu Mugam - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை உமது திரு நாமம் அறிந்தவர்கள் கைவிடப்படுவதில்லை நம்பினோரை நீர் மறப்பதில்லை உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை ஒன்றுக்கும் உதவாதோர் என்று நீர் எவரையும் சொல்லுவதில்லை இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே ஏழைகளின் பெலன் நீரே எளியோரின் நம்பிக்கை நீரே திக்கற்றோர் வேதனை அறிந்து உதவுடும் தகப்பன் நீரே

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா சேயாக நம்பி வந்தேன் வாழ்வில் ஒளியேற்ற வா கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத் தேற்றவே பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன் நான் என்றும் உன் சாயல்தானே உன் கோவில் குடிகொள்ள நீ வா 2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மீட்டிடுவேன் உன் வார்த்தைக் கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன் எல்லாமே நீதானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே en suvaasak kaatte en vaalvin ootte

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே  இறைவா என் உள்ளம் வருவாய்  என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே  தலைவா நீ உன்னைத் தருவாய்  என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே  இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்  நீதானே நீதானே இறைவா  என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்  தருவாயே தருவாயே தலைவா  வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே  வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2  வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை  அறிவேனே அறிவேனே இறைவா  உனைப் போல நானும் பிறரன்பில் வளர  அருள்வாயே அருள்வாயே தலைவா  மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே  ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே – 2  நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய் 

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

Image
மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல அகமே அகமே அருள் நிறையுதம்மா பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம் அருளால் அருளால் அம்மா உன் அருளால் கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம் எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம் ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம் இறைவன் வாழும் சீயோன் நகரமே  யாவே தங்கிய சீனாய் சிகரமே (2) அழிந்திடா பேழையே அழகானச் சோலையே விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே ஆணவத்தைத் தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே இறைவன் உம்மை விரும்பியதாலே உறைவிடமாக உம்மைத் தேர்ந்தாரே (2) ஆண்டவர் உம்மிலே வாழ்கின்றார் என்றுமே அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் நன்றி சொல்லி போற்றுவோம்

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

Image
இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே புதுமைகளை புரியும் எங்கள் புனித அந்தோணியாரே சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே துன்பம் பிணி வறுமைகளை  களைபவரும் நீரே ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே சரணமய்யா...... நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே நற்செய்தி போதித்த போதகரும் நீரே உயிருள்ள இயேசுவிற்காய்  வாழ்வைத் தந்தாயே உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே சரணமய்யா...... பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே கரமதில் பாலனை சுமந்து நின்றாயே கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே சரணமய்யா.....

Christian Crib

Image