ஜெபமாலை மறை உண்மைகள்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi74t8LDBU3UaFAkW21NmHWWGx-Pp19hQUw6vEK2su0yYiwIkAAfboCwDbrKbyNtNkAlDKXWytSX6np06Bl4OONzoWilBORJa6ovu_1yt6-4yQxGAKSGkIPIZa-wpAvJWoF65XpEnUe8nCj/s1600/1674230500530698-0.png)
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனி) 1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக. 2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளி) 1. இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போம்! 2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமான...