புனித தேவமாதாவின் பிராத்தனை

புனித தேவமாதாவின் பிராத்தனை

சுவாமி கிருபையாயிரும்
- சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்
- கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்
- சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
- கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
- கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாராகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தம திருத்துவமாகிய ஏக சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சர்வேசுரனுடைய புனித மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவினுடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்சபையின் மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா பரிசுத்த மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல ஆலோசனை மாதாவே,,,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சிருஷ்டிகருடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இரட்சகருடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா புத்தி உடைத்தான கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்தி உடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தயையுள்ள கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தருமத்தின் கண்ணாடியே…
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானத்துக்கு இருப்பிடமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள் சந்தோசத்தின் காரணமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானப் பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகிமைக்குரிய பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறை பொருளை கொண்ட ரோஜா மலரே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரலோகத்தினுடைய வாசலே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்க்காலத்தின் நட்சத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சம்மனசுக்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஸ்துதியர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச் செபமாலையின் இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சமாதானத்தின் இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.. இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக :

இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். –ஆமென்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics