தூய ஆவியார் செபம்
தூய ஆவியார் செபம்
தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர்.
எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர்.
உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சியுற்றதை நனைத்திடுவீர்.
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.
குளிரானதை குளிர் போக்கிடுவீர்.
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர்.
புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென்.
Comments