Posts

Showing posts from 2023

santa ratri tiru ratri ശാന്ത രാത്രി തിരു രാത്രി

Image
ശാന്ത രാത്രി തിരു രാത്രി പുല്‍കുടിലില്‍ പൂത്തൊരു രാത്രി.. വിണ്ണിലെ താരക ദൂതരിറങ്ങിയ മണ്ണിന്‍ സമാധാന രാത്രി.. ഉണ്ണി പിറന്നൂ ഉണ്ണിയേശു പിറന്നൂ (3) (ശാന്ത..) 1 ദാവീദിന്‍ പട്ടണം പോലെ പാതകള്‍ നമ്മളലങ്കരിച്ചു .(2) വീഞ്ഞു പകരുന്ന മണ്ണില്‍.. നിന്നും വീണ്ടും മനസ്സുകള്‍ പാടി (ഉണ്ണി പിറന്നൂ..) 2 കുന്തിരിക്കത്താല്‍ എഴുതീ.. സന്ദേശ ഗീതത്തിന്‍ പൂ വിടര്‍ത്തീ (2) ദൂരെ നിന്നായിരമഴകിന്‍ കൈകള്‍ എങ്ങും ആശംസ തൂകി (ഉണ്ണി പിറന്നൂ..)

sakthimanthuda sarvonathuda sarvasrustike శక్తిమంతుడా సర్వోన్నతుడా సర్వసృష్టికే గొప్ప ప్రభువా

Image
పల్లవి శక్తిమంతుడా సర్వోన్నతుడా సర్వసృష్టికే గొప్ప ప్రభువా {2} అను పల్లవి: నన్ను నన్నుగా ప్రేమించినా నమ్మకమైన నా యేసయ్య {3} మహిమా నీకే మహిమా మహోన్నతుడా నీకే మహిమా{4} 1చరణం: జీవాన్ని పోసిన జీవాధిపతివి జీవితాన్ని ఇచ్చిన జ్యోతిర్మయుడివి{2} 2చరణం: పరమునే విదచిన పరలోకతన్ద్రివి పాపాన్ని క్షమించిన పరిశుద్ధుడివి{2}

அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட் (Blessed Charles de Foucauld)

Image
*✠ அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட் ✠* (Blessed Charles de Foucauld) மறைசாட்சி: (Martyr) பிறப்பு: செப்டம்பர் 15, 1858 ஸ்ட்ராஸ்பர்க், ஃபிரான்ஸ் (Strasbourg, France) இறப்பு: டிசம்பர் 1, 1916 (வயது 58) டாமன்ரஸ்செட், ஃபிரென்ச் அல்ஜீரியா (Tamanrasset, French Algeria) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) அருளாளர் பட்டம்: நவம்பர் 13, 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) நினைவுத் திருவிழா: டிசம்பர் 1 அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட், ஒரு ஃபிரென்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், அல்ஜீரியாவின் (Algeria) “சஹாரா" (Sahara) பாலைவனத்தில் வாழ்ந்த “துவாரெக்” (Tuareg) மக்களிடையே வாழ்ந்த ஒரு துறவியும் ஆவார். கி.பி. 1916ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையினால் மறைசாட்சியாக மதிக்கப்படுகிறார். பின்னாளில் திருத்தந்தை “பதினாறாம் பெனடிக்ட்” இவருக்கு முக்திபேறு பட்டமளித்து கௌரவித்தார். இவரது எழுத்துக்களும் உத்வேகமும், 1933ம் ஆண்டில் “இயேசுவின் சிறிய சசோதரர்கள்” (Little Brothers of Jesus) என்னும் துறவறசபை நிறுவப்பட வழிவகுத்தத...

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்

Image
*உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது.. எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது* _தியானம்:_  இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே.  கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்: முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரி...

புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

Image
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️  மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே புதுமை வரங்களில் சிறந்தவரே தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம் இதயபூர்வமான நன்றி நவில்கிறோம். எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும். *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும். யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும். இப்பெரிய வரத்த...

உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே.

Image
🏮🕯️🏮🕯️🏮🕯️🏮🕯️🏮 சீராக்கின் ஞானம் 7 :33 ✝️ 🏮🕯️🏮🕯️🏮🕯️🏮🕯️🏮 ✝️ ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.  ✝️ ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.  2 மக்கபேயர் 12 : 44 - 45 ✝️ ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ *உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம் மற்றும் புகழ்மாலை* ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் ...

சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும் .( லூக்.19:5)

Image
Christian Irai Padalgal Youtube  சக்கேயு தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன். ஆயக்காரன் என்றால் வரி வசூலிப்பவன். யூதர்களிடம் வரி வசூலித்து, வரிப்பணத்தை ரோமை அரசுக்கு செலுத்துபவன். வரி வசூதிப்பவர்கள் யூதர்களால் பாவிகள் என கருதப்பட்டார்கள். மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான். பாவிகளைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார். இயேசு யெரிக்கோ வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது சக்கேயு அவரைப் பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் அவன் குள்ளமாக இருந்ததால் கூட்டத்தில் அவரால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான். இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது? சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப்படும் முன்பே இயேசு அவனைப் பார்க்க ஆசைப்பட்டு விட்டார். இயேசுவின் ஆசை நித்தியமானது. யெரிக்கோ வழியாக செல்லும் போது சகேயுவைப் பார்க்க வேண்டும்,  அவனது வீட்டில் வந்து அன்று தங்க வேண்டும் என்று அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டு விட்ட...

நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்

Image
🍥❤🍥❤🍥❤🍥❤ நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்🙏✝️🧚‍♂️✝️🙏 🍀🌺🍀🌺🍀🌺🍀🌺 ✝️🧚‍♂️ நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.  ✝️🧚‍♂️உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.  திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 91:11-12 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனால் எங்களுக்கு பாதுகாப்புத் தந்திட ஏற்படுத்தப்பட்டுள்ள எங்கள் இறைவனின் வான தூதரே! 🧚‍♂️✝️🙏 எங்களுக்கு ஞான ஒளியைத் தந்து எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏✝️🙏  ஆமென் 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ ☀🌹☀🌹☀🌹☀🌹☀

உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?

Image
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார். 

சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?

Image
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்தநாளும் நம்முடன் இருக்கிறார்.

இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?

Image
1. யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார். 2. கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார். 3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார். 4. கல்லூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார் 5. முள்முடி சூட்டப்பட்டார். 6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே | Amaithiyin thuthanai Yennaiyae Maatumey

Image
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2 அன்பனே இறைவனே என்னிலே வாருமே அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே 1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2 வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் 2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2 இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும் 3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2 கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும் தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்

புதிய வானம் புதிய பூமி காணுவோம் புலருகின்ற புதிய ஆண்டில் | Puthiya Vaanam Puthiya Boomi Kaanuvom Pularukinta Puthiya Aandil

Image
புதிய வானம் புதிய பூமி காணுவோம் புலருகின்ற புதிய ஆண்டில் புதிய மனிதராய் ஆகுவோம் வாருங்கள் அருள் தேடுங்கள் வாழ்வினில் புகழ் சேருங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்கும் நேரம் வள்ளல் இயேசு உள்ளம் பெறுவோம் வாழ்வின் நிறைவாம் அன்பின் கொடைகள்  வாழ்வில் கண்டு வளமை சேர்ப்போம் இறைவன் வழியில் நடக்கும் போது பயமே எனக்கில்லை - அவர் துணையில் நானும் வாழும் போது அச்சம் எனக்கில்லை மனித மாண்பைக் கொணரத் துடிக்கும் மனிதர் நடுவில் வாழ்வில் பிறக்கும் மகிழ்வால் வாழ்வை நனைக்கும் பணியில் மனங்கள் யாவும் ஒன்றி வாழும் மனித உறவை வளர்க்கும் பணியில் மாற்றம் இனி இல்லை - அவர் மனதை அடையும் இலட்சிய நோக்கில் மாற்றம் இனி இல்லை 

ஒன்று கூடி நன்றி கூறுவோம் இந்த நாளில் நன்றி கூறுவோம் | Ontu Koodi Nantri Kooruvom Intha Naallil

Image
ஒன்று கூடி நன்றி கூறுவோம் இந்த நாளில் நன்றி கூறுவோம் இறைவன் தந்தைக்கு யுபிலி ஆண்டிலே மகிழ்ந்து ஒன்றாய்ப் புகழ்ந்து பாடுவோம் (2) உலகைப் படைத்து நமக்குத் தந்த அன்புத் தந்தைக்கு மகனை அனுப்பி நம்மை மீட்ட தியாகத் தந்தைக்கு ஆவி அளித்து மகவாய் ஏற்ற நல்ல தந்தைக்கு இருளில் இருந்து ஒளிக்கு அழைத்த வல்ல தந்தைக்கு தாய் மறந்தும் நம்மை மறவா தாயுமானவர்க்கு தாலாட்டி தமது மகனை உணவாய்த் தந்தவர்க்கு தோளில் தூக்கி முத்தம் பொழியும் பாசத் தந்தைக்கு தொலைவில் இருக்கும் நம்மை நினைத்து ஏங்கும் தந்தைக்கு

இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?

Image
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார். 

இயேசு கிறிஸ்து யார்?

Image
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர்; பாவத்திலிருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவில் நிறை வாழ்வு காண நமக்கு வழி காட்டுபவர்‌. 

இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?

Image
1. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். 2. அப்பம் பலுகச் செய்தார். 3. புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார். 4. நோய்களைக் குணப்படுத்தினார். 5. பேய்களை ஓட்டினார். 6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார். 7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?

Image
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.

பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும். 2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும். 3. இயேசு நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.

கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். 2. அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?

Image
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார். அவர்களைத் திருத்தூதர் என்று அழைத்தார். 

ईश्वर की दस आज्ञाएं | Ten Commandments of God Hindi

Image
1. मैं प्रभु तेरा परम ईश्वर हूँ। प्रभु अपने परमेश्वर की आराधना करना। उसको छोड़ और किसी की नहीं। 2. प्रभु अपने परमेश्वर का नाम व्यर्थ न लेना। 3. प्रभु का दिन पवित्र रखना। 4. माँ–बाप का आदर करना। 5. मनुष्य की हत्या न करना। 6. व्यभिचार न करना। 7. चोरी न करना। 8. झूठी गवाही न देना। 9. परस्त्री की कामना न करना। 10. पराये धन पर लालच न करना।

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் எப்படி கடவுள்?

Image
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் மூன்று கடவுளா அல்லது ஒரே கடவுளா?

Image
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் ஒரே கடவுளே. 

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுளா?

Image
ஆம் தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுள்தான்.

இயேசு திருமுழுக்குப் பெற்ற போது நடந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்.?

Image
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?

Image
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

இயேசு யாரிடம் திருமுழுப் பெற்றார்?

Image
இயேசு திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?

Image
ஆம், தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.

இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

Image
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார். 2. நாசேரேத்தில் வளர்ந்து வந்தார். 3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். 4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார். 5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்‌

இயேசுவின் தந்தை யார்?

Image
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே 

இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?

Image
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார் 

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் | Iratham Jeyam Iratham Jeyam Kalvaari Yesuvin Iratham Jeyam

Image
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம் நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் 5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம் பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் 6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

இயேசுவின் தாய் யார்

Image
இயேசுவின் தாய் எப்போதும் கன்னியான தூய மரியா 

இயேசு எந்த ஊரில் பிறந்தார்?

Image
இயேசு பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?

Image
இயேசு பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?

Image
இயேசு   என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.

கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?

Image
கடவுள் வாக்களித்த மீட்பர் இயேசு கிறிஸ்து 

பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?

Image
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகப் கடவுள் வாக்களித்தார்.

முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?

Image
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர். 2. கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர் 3. பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

மனிதர் பெரு மகிழ்வில் பங்குகொள்ளும் நிலையை எவ்வாறு இழந்தனர்?

Image
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

அகவிருந்தாக என் இறைவா வா, Aaga Virunthaaga Yen Iraiva Va

Image
அகவிருந்தாக என் இறைவா வா - மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை உமதுடலென நீ மாற வைத்தாய் 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம் 3. நேரிய மனத்தவர் குறை தணிப்பாய் - எமை நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் நலமிகு உணவால் நிறைத்திடுவாய் - இனி உலகினை உனிலே வாழ வைப்பாய்  

பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?

Image
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்றும் அழைக்கிறோம்.

கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?

Image
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.

கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?

Image
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்

Image
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?

Image
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

வானதூதர் என்பவர் யார்?

Image
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்குபெறுபவர்களே வானதூதர் ஆவர்.

கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?

Image
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

அனைத்தையும் படைத்தவர் யார்?

Image
அனைத்தையும் படைத்தவர் யார்?         கடவுள்.