அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே | Amaithiyin thuthanai Yennaiyae Maatumey

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2
அன்பனே இறைவனே என்னிலே வாருமே
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே

1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்

3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2
கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்
தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு