vaanathilum indha boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும்

வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான
இயேசுவின் நாமமது
இயேசு நாமம் எனக்கு போதும்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு