அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே, Annaithilum Uyar Neeri Anbey Anbey Anbey

அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே
அதனை அனைவரும் ஏற்றிப் போற்றுவோம்
ஏற்று வாழுவோம்

மண்ணோர் மொழிகள் பேசிடினும்
விண்ணோர் மொழிகள் பேசிடினும்
அன்பு நமக்கு இல்லையெனில்
ஒலிக்கும் வெண்கல நிலையாவோம்

அறிவு அனைத்தும் இருந்தாலும்
மறைநூல் யாவும் தெரிந்தாலும்
அன்பு நமக்கு இல்லையெனில்
நம்மில் ஒன்றும் பயனில்லை

மலையைப் பெயர்க்கும் அளவுக்கு
மாண்புறு விசுவாசம் இருந்தாலும்
மனதில் அன்பு இல்லையெனில்
மண்ணில் நமக்கு என்ன பயன்

உடைமை யெல்லாம் கொடுத்தாலும்
உடலைத் தியாகம் செய்தாலும்
அன்பு நமக்கு இல்லையெனில்
நம்மால் நமக்கு என்ன பயன்



Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு