அழகான உலகம் ஒன்றை கண்டேன் இறைவா, Azlagana Ullagam Ontrai Kannden Iraiva

அழகான உலகம் ஒன்றை நான் கண்டேன் இறைவா
அது அன்பும் பகிர்வும் ஒர் நிலை தலைவா

அன்பே வாழ்வாகிட பகைமை அழியக் கண்டேன்
உறவில் உண்மை இணைந்திடவே
மனங்கள் மகிழக் கண்டேன்
அதுவே உனதாட்சி என உணர்ந்தேன்
வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே 
அன்பும் உறவும் பெருகி மனித இனமும் வாழவே

பகிர்வு வளர்ந்திடவே வறுமை ஒழியக் கண்டேன்
நீதியும் நேர்மையும் தளிர்த்திடவே 
மனிதம் மலரக் கண்டேன்
அதுவே உனதாட்சி என உணர்ந்தேன்
வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே
பகிர்வு நீதி பரவி மனித இனமும் வாழவே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு