அழைக்கும் இறை உன் குரல் கேட்போம் உம் அழைப்பினை ஏற்றுப் பின்தொடர்வோம் | Azlaikum Irai Un Kural Ketpom
அழைக்கும் இறை உன் குரல் கேட்போம்
உம் அழைப்பினை ஏற்றுப் பின்தொடர்வோம்
எரியும் புதரில் மோயிசனை
வீசும் காற்றில் எலியாசை
இடியின் ஒலியில் சின்னப்பரை
இறைவன் அழைத்து வா என்றுரைத்தார்
அழைப்பை ஏற்று விரைகின்றோம்
அருளால் நிறைத்து வாழ வைப்பாய்
தனக்கென வாழாப் பணி ஏற்றோம்
பிறர்க்கென வாழும் வரம் நல்கிடுவாய்
தகுதியில்லாத எமை ஏனோ
இறைவா விரும்பி அழைத்தாயோ
உனக்கென உள்ளத்தை அளிக்கின்றோம்
உறவென உனையாம் அடையச் செய்திடுவாய்
Comments