அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் | Arravanaikum Anbu Deivamey Yesuvey Adiyeduthu
அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே
அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் எல்லாம்
என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டும்
சோகங்கள் பல கோடி சூழ்ந்திடும் வேளையில் - உன்
சிறகினில் எனை மூடி அடைக்கலம் தர வேண்டும்
உந்தன் புது உறவிலே கவலை எல்லாம் மறந்து
உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன்
வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்
வல்லமைக் கரம் என்னில் இருந்திட வேண்டும்
உந்தன்நல் துணையிலே பாதையினைத் தெரிந்து
எந்நாளும் நிலைவாழ்வுப் பயணம் தொடர்வேன்.
Comments