புனித சூசையப்பரை* *நோக்கி ஜெபம், மன்றாட்டு* *மற்றும் புகழ்மாலை*



✝️🌷🌻🌷✝️🌷🌻🌷✝️

✝️💐 மகா பாக்கியம் பெற்ற அர்ச். சூசையப்பரே ! 🧎‍♂️

✝️💐 எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.🧎‍♂️

✝️💐 தேவ தாயாரான ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். கன்னி மரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை இயேசு நாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால் 🧎‍♂️

*✝️ (விரும்பியதைக் கேட்கவும்.) ✝️*

 ✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.🧎‍♂️

✝️💐 ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே ! 🧎‍♂️
 
✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். 🧎‍♂️

✝️💐 ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! 🧎‍♂️

✝️💐 நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். 🧎‍♂️

✝️💐 ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே ! 🧎‍♂️ 

✝️💐 நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக. ! 🧎‍♂️

✝️💐 திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். 🧎‍♂️

✝️💐உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது. 🧎‍♂️ 

✝️💐 உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம். 🧎‍♂️

*🙏🏻ஆமென்.🙏🏻✝️🙏*

✝️🌸🌻🌸✝️🌸🌻🌸✝️

*🙏🏻🌹புனித சூசையப்பரிடம் மன்றாட்டு🙏🏻*

✝️🌺🌻🌺✝️🌺🌻🌺✝️

✝️🌹✝️ புனித சூசையப்பரே! 🧎‍♂️

✝️🌹உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.🧎‍♂️

✝️🌹உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.🧎‍♂️

✝️🌹✝️ புனித சூசையப்பரே !🧎‍♂️ 

✝️🌹உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். 🧎‍♂️

*🙏🏻 ஆமென்.🙏🏻✝️🙏*

✝️🌷🌿🌷✝️🌷🌿🌷✝️

        ✝️🌹 *புனித சூசையப்பருக்கு புகழ் மாலை* 🌹 

✝️🌷🌿🌷✝️🌷🌿🌷
✝️

✝️🌷 சுவாமி கிருபையாயிரும்

✝️🌷கிறிஸ்துவே கிருபையாயிரும்

✝️🌷சுவாமி கிருபையாயிரும்

✝️🌷கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

✝️🌷கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

✝️🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

✝️🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

✝️🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

✝️🌷அர்ச்சியசிஷ்ட தம திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

✝️🌷அர்ச்சியசிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷பிதாப் பிதாக்களின் மகிமையே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷தேவ தாயாரின் பத்தாவே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷கன்னி மரியாயின் கற்புள்ள காவலனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷தேவ குமாரனை வளர்த்த தகப்பனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷கிறிஸ்து நாதரை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷திருக் குடும்பத்தின் தலைமையானவரே- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

🌷உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷பொறுமையின் கண்ணாடியே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷தரித்திரத்தின் அன்பனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷தொழிலாளிகளுக்கு மாதிரிகையே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷சமுசார வாழ்க்கையின் ஆபரணமே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷கன்னியர்களின் காவலனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷குடும்பங்களுக்கு ஆதரவே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

✝️🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே - எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

✝️🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

✝️🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே - எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

✝️🌷கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

*மன்றாடுவோமாக* ✝️💒🧎‍♂️

✝️🌹 சர்வேசுரா சுவாமி ! உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திரு மாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக் கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே. 🧎‍♂️ 

✝️🌹 பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்ணுமென்று மன்றாடுகிறோம்.🧎‍♂️

✝️🌹பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே. 

*🙏🏻ஆமென்.🙏🏻✝️🙏*

✝️♥ திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே ! 🧎‍♂️

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ✝️🧎‍♂️✝️

             

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு