சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் | மாதா சுப்பிரபாதம் | Sawmi Kirubai Yairum


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி தயவாயிரும்
கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்
கிறிஸ்துவே நன்றாகக் கேட்டருளும்

பரத்தைப் படைத்த பிதா சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும்

உலகத்தை மீட்ட சுதன் சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும்

பரிசுத்த ஆவி சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும்

தமத்திரித்துவ ஏக சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும்

அர்ச்சயசிஷ்ட மரியாயே
சர்வேசுரன் அர்ச்சய மாதாவே

கன்னியரில் நல்ல கன்னிகையே
கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவப் பிரசாதத்தின் மாதாவே
மகாப் பரிசுத்த மாதாவே
அத்தியந்த விரத்தி மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
கன்னி சுத்தங் கெடாத மாதாவே
அன்புக்குப் பாத்திர மாதாவே
ஆச்சரியமான மாதாவே
நல்லாலோசனை மாதாவே
சிருஷ்டிகருடைய மாதாவே
இரட்சகருடைய மாதாவே
மகாப் புத்தியுள்ள கன்னிகையே
வணக்கத்துக்குரிய கன்னிகையே
ஸ்துதிக்க யோக்கியமான கன்னிகையே
சக்தியுடைத்தான கன்னிகையே
தயை மிகவுள்ள கன்னிகையே
விசுவாசியான கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்திற்கு இருப்பிடமே
எங்கள் சந்தோஷத்தின் காரணமே
ஞானம் நிறைந்த பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
அத்தியந்த பக்தியுள்ள பாத்திரமே
தேவ ரகசிய ரோஜாப்பூவே
தாவீது ராஜாவின் உப்பரிகையே
தந்த மயமான உப்பரிகையே
சொர்ண மயமான ஆலயமே
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே
பரலோகத்தினுடைய வாசலே
விடியற்காலத்தின் நட்சத்திரமே
வியாதிக்காரர்க்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
கஸ்திப் படுவோர்க்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுக்களின் இராக்கினியே
பிதாப்பிதாக்களின் இராக்கினியே
தீர்க்கதரிசிகளின் இராக்கினியே
அப்போஸ்தலர்களின் இராக்கினியே
வேதசாட்சிகளின் இராக்கினியே
ஸ்துதியர்களுடைய இராக்கினியே
கன்னியர்களுடைய இராக்கினியே
சகல அர்ச்சிஷ்டவரின் இராக்கினியே
ஜென்மப் பாவமில்லா இராக்கினியே
மோட்ச ஆரோகண இராக்கினியே
திருச்செபமாலையின் இராக்கினியே
சமாதானத்தின் இராக்கினியே
திருக்குடும்பத்தின் இராக்கினியே
இந்திய தேசத்தின் இராக்கினியே
உலகத்தின் பாவங்களைப் போக்கும்
உத்தம செம்மறிப் புருவையாம்
உன்னத இயேசு கிறிஸ்துவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும்
எங்கள் பிரார்த்தனை கேட்டருளும்
எங்களைத் தயை பண்ணி இரட்சியும்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு