வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை செய்து வந்த ஜெபம்
*மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே! உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.*
*வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.*
.*தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன். எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.*
*திருக்கன்னி மரியாயின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே! உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும். நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.*
*சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!*
*ஆமென்.*
*மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்*
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
Comments