நம்பியே வா நல்வேளையிதே உன் நேசர் இயேசுவையே நம்பிடுவாய்


கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் - நம்பியே
திக்கற்றோரின் தகப்பனவர்

தவிக்கும் விதவையின் தேவனவர்

அமைதியிழந்து கண்ணீரோடே

அலைந்திடாமல் நீ நம்பியே வா - நம்பியே
கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் செவி மந்தமாகவில்லை

தேவனின் பின்னே உன் வினைகள்

தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே - நம்பியே
சூரியனின் கீழ் உள்ளவை

சகலமும் வெறும் மாயையல்லோ

மானிடர் என்றும் மாறிடுவார்

மாறாத இயேசுவை நம்பிடுவாய் - நம்பியே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு