இதோ இதோ ஒரு யாத்திரை - உம்இரக்கம் வேண்டும் திரு யாத்திரை (2)

இதோ இதோ ஒரு யாத்திரை - உம்
இரக்கம் வேண்டும் திரு யாத்திரை (2)
இதயத்தை தகர்க்கும் இடர்பாடிடையே
உம்மையே நம்பும் யாத்திரை -2
ஓ இறைவா ஓ நல்லவரே என் கூக்குரல் கேட்டருளும்
ஓ இறைவா ஓ வல்லவரே எம்மைக் காத்திட எழுந்தருளும் (2)

1. கடற்கடந்த எம் யாத்திரை எம் கைவிலங்கு தகரவே
உடலுயிர் மறந்து போராடும் யாம்
உம் துணையில் வெல்லவே (2)
ஒடுக்கப்பட்டோரின் உயிர்ப்பே
எம்மை உரிமைக் குலமாக்குமே - 2

2. இதயத்தினால் ஒரு யாத்திரை உம் இன்னுறவை அடையவே
கதியற்று வாடும் சோதரர்க்கு கைகொடுத்து வாழவே (2)
பகையற்று வாழும் அன்பின் உலகை
உரிமையாய்த் தாருமே (எமக்கு) 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு