இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திடஎழுந்திங்கு வாரீர் இறைமக்களே

இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் கலந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே
எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே - 2

1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ (2)
அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் வாழும் வழியன்றோ (2)

2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட
தன்னையே தந்தவர் இறைவனன்றோ (2)
அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவதும்
புதுயுகம் காணும் முறையன்றோ (2)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு