இதயங்கள் மலரட்டுமே நம்மில், Idhayangal Malaratum Nammil.

இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இன்னிசை முழங்கட்டுமே (2)
இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே

1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2)
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம்
கரையில்லாக் கருணையால் நமை மீட்டார்

2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2)
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை
தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம்

3. இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் - நெஞ்சில்
அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2)
திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் - 2 அதை
தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம்

 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு