இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி - 2
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2

1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்

2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வைத் தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் - வாராய்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு