நீண்ட மனத்துயர் மன்றாட்டு
என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். எனக்கு உம்முடைய அருள்வரங்களையும் விண்ணக பெருமகிழ்வையும் தந்தருள்வீரென்று முழுமனதுடன் நம்புகிறேன். திருஅவை கற்பிக்கும் அனைத்தும் நீரே அறிவித்துள்ள காரணத்தினால் முழுமையாக நம்புகிறேன். ஆமென்.
Comments