சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயா|| Santhosam ponnguthey Santhosam Ponnguthey

சந்தோஷம் பொங்குதே – (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ
பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில்
எந்தன் பாவம் நீங்கிற்றே (2)

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய்  வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே (2)

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு

என்றும் வாழுவேன் (2)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு