முதியோர்களின் செபம்

ஆண்டவரே ! என் காலங்களெல்லாம் எவ்வகையாய் போனதென்று அறியேன். இப்போது தான் பிறந்து விளையாடி குடும்பக்காரியங்களை செய்துகொண்டிருந்ததாக என் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தச் சொற்ப காலத்தில் எத்தனை யோவிசை என் வாக்கினாலும் செயல்களினாலும் வீண் ஆசையினாலும் உமக்குத் துரோகம் செய்தேன். அப்போது எனக்கு கல்லறை கிட்டி வருகிறது. பயங்கரமான நடுத்தீர்வையிலே என்ன சொல்லப்போகிறேன் என்று அஞ்சுகிறேன். நான் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் அழுக்கடைந்து போயிருப்பதால் கடைசிகாரியங்களைத் தெளிவாய்ச் சரியாய் யோசித்து தியானிக்க முதலாய் அறியேன். ஆகையால் தேவரீர் என்பேரில் கிருபை கூர்ந்து நான் சாகுமுன் என் பாவங்களை நினைத்த அழுது பிரலாபித்து அவைகளுக்குப் பரிகாரமாக தவம் புரிந்து நல்ல மரணமடைய அனுக்கிரகம் செய்தருள உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு