பாஸ்கா காலத்தில் மூவேளை செபம்
முதல்: விண்ணக அரசியே ! மனம் களிகூறும்,
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறு பெற்றீர்,
எல்: அல்லேலூயா
முதல்: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா
முதல்: எங்களுக்காக இறைவனை மன்றாடும்,
எல்: அல்லேலூயா
முதல்: கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர்,
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா
செபிப்போமாக:
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் உலகம் மகிழ திருவுளம் கொண்டீரே! அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் என்றென்றும் நிலைவாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற, அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.
Comments