மூவேளைச் செபம்
முதல்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
எல்: அவளும் தூய ஆவியரால கருத்தரித்தார் - அருள் நிறை
முதல்: இதோ ஆண்டவரின் அடிமை
எல்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும் - அருள் நிறை
முதல்: வாக்கு மனிதரானார்
எல்: நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை
முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
Comments