அப்பா உங்க மடியில தலைசாய்க்கணும் ||Appa Unga Madiyila

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
- அப்பா உங்க

என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என் - 2
                               - அப்பா உங்க

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
                               - அப்பா உங்க

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான் - 2
                               - அப்பா உங்க

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு