உன் புகழை பாடுவது என் வாழ்வின் இன்பமய்யா
உன் புகழை பாடுவது என் வாழ்வின் இன்பமய்யா
உன் அருளை போற்றுவது என் வாழ்வின் செல்வமையா
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்
நீ என்றும் அணைத்திருப்பாய்
பல்லுயிரை படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
உன் அருளை போற்றுவது என் வாழ்வின் செல்வமையா
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்
நீ என்றும் அணைத்திருப்பாய்
பல்லுயிரை படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
Comments