இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக

இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக 
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர 
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு 
காய்த்து கனிந்த கனிகளும் - ஓங்கி 
உயர்ந்த மரங்களும் அதை சூழ்ந்து வளர்ந்த செடிகளும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே

நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பறந்து திரியும் பறவைகள் - அவை 
பாடும் கடல் வாழ் விலங்குகள் 
காற்றும் கடலும் கார்முகில் 
வான வில்லும் நிலவும் விண்மீன்களும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு