dhinam oru varam vaendum தினம் ஒரு வரம் வேண்டும்

தினம் ஒரு வரம் வேண்டும்
தீர்க்கமாய் தினம் வேண்டும்
தீங்கில்லா உளம் வேண்டும்
தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 
 
கடுகளவு விசுவாசம் தேவை என்று ஓடி வந்தேன்
கரையாத கல்மனமும் கரைந்திட காத்திருந்தேன் 
இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராகி 
குறைவில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெறவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 
 
பறவைகள் பகிர்வது போல் மரங்கள் கனி தருவது போல் 
மேகம் மழை பொழிவது போல் நிலவு ஒளி தருவது போல் 
இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்
உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு