என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.


Visit Our YouTube channel For Lyrics Song

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு