படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் || Padaipu Yelam Umakey Sontham


படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் 
நானும் உந்தன் கைவண்ணம் 
குயில்கள் பாடும் கிளிகள் பேசும் 
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே 

இயற்கை உனது ஓவியம் 
இணையில்லாத காவியம் 
அகிலமென்னும் ஆலயம் 
நானும் அதில் ஓர் ஆகமம் 
உள்ளம் எந்தன் உள்ளம் அது 
எந்நாளும் உன் இல்லமே 

இதயம் என்னும் வீணையில் 
அன்பை மீட்டும் வேளையில் 
வசந்த ராகம் கேட்கவே 
ஏழை என்னில் வாருமே 
தந்தேன் என்னை தந்தேன் என்றும் 
என் வாழ்வு உன்னோடு தான் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு