ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே ||Ayiram Malarsollaigal yenthan

ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே
அருள் பொங்கும் ஆழகினிலே- என்றும்
ஆனந்தம் அலைபாயுதே உந்தன் கருணை விழிகளிலே-2

1. நாளெல்லாம் நலம் காப்பவள் எங்கள் அன்னை நீயல்லவா-2
பூவெல்லாம் நிதம் புனிதமாய் வந்து பூக்கும் உன்னடியே-2
பூங்கனம் தனை நீட்டியே பேருலகை காக்கும் அன்னை நீயே

அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே
அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே

2. மலர்முகம் தனை காட்டியே மனம் மகிழ்ச் செய்பவளே- 2
மலர்ந்திடும் வண்ண மலர்களில் தினம் பூத்து சிரிப்பவளே- 2
ஆனந்தம் பரமானந்தம் உனை காணும் விழிதனில் கருணை நிறைந்திட 

அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே
அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு