ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே

ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை
எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2)

1. அன்பாலே உலகை நிரப்பிய அழகே
அளிக்க வந்தோம் எங்கள் இதய அன்பை (2)
ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா
தருகின்றோம் தனிப்பதம் பணிந்தே

2. என் நெஞ்சில் நிம்மதி ஒளிதந்த நிலவே
இன்னுயிர் கலந்த வான்முகிலே (2)
வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே -2
இறைஞ்சுகின்றோம் பரமனின் திருமுன்

3. பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி
மன்னவர் மூவர் காணவந்தார் (2)
மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே -2
மனமுவந்தே காணிக்கை தந்தோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு