இறைவன் என்னை காக்கின்றார் குறை ஒன்றும் எனக்கு இல்லையே | Iraivan Ennai Kakkintar

இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்

புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (2) -இறைவன்

தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான(2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்(2)-இறைவன்

இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு