இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா எளிய நல்குரல் தனிலே| Isai Ontru Isaikkintren

இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய நல்குரல் தனிலே - 2
என் இதயத் துடிப்புக்களோ - என்
இசையின் குரலுக்குத் தாளங்களே - 2

காலத்தின் குரல்தனில் தேவா - உன்
காலடி ஓசை கேட்கின்றது - 2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு