என்னிதய வேந்தனே இயேசு பாலனே உன்னைத் தாலாட்ட வா ராஜனே எந்தன் தாயாக வா

என்னிதய வேந்தனே இயேசு பாலனே
உன்னைத் தாலாட்ட வா ராஜனே எந்தன் தாயாக வா (2)
ஆராரிரோ ஆரிரரோ - 2

1. பாவிநம் அருகிலே மரியன்னை மடியிலே
பூமகன் அழுவதும் ஏனோ இந்த பாமரன் பாவங்கள் தானோ (2)
கந்தையை உடுத்தியே சிந்தையைக் கவர்ந்திட்டாய் -2
விந்தை என் இயேசு பாலனே இந்த
மந்தையைக் காக்கும் மீட்பனே - ஆராரிரோ ஆரிரரோ - 2

2. உலகம் முழுவதும் உந்தன் கையிலே கலகமின்றி வாழுதே
என்றும் அமைதியை உன்னில் காணுதே (2)
ஏழ்மையின் சின்னமாய் எளிமையின் கோலமாய் - 2
குடிலினில் உம்மைத் தந்தவா இந்த
குவலயம் காக்க வந்தவா - ஆராரிரோ ஆரிரரோ - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு