இறைவா நீ ஒரு சங்கீதம் அதில்‌இணைந்தே பாடிடும் என் கீதம்|| Iraiva Nee Our Sangeetham

இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்
இணைந்தே பாடிடும் என் கீதம்
உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்
என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்
இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2
பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்
பாடலால் என்னகம் இணைந்திடுமே
எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா
காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ
தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2
நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை
நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்
தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு