கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை அன்பு காணிக்கை

கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை
அன்பு காணிக்கை (2)
அன்னை மரியின் வயிற்றில் பிறந்த மைந்தன் காணிக்கை
தெய்வ காணிக்கை (2)

1. மனித உறவினை விரும்பிய இறைவன்
மைந்தனைத் தந்தான் காணிக்கை (தன்) 2
புனித அன்பின் வெளிப்பாடாக
புதல்வனைத் தந்தான் காணிக்கை (தன்) 2
இறைவன் தந்தான் காணிக்கை
உளம் எண்ணி வியக்கும் காணிக்கை (2)
இயேசுவே அந்த காணிக்கை
விலைமதிக்க இயலா காணிக்கை (2)

2. காணிக்கை தந்த இறைவனுக்கு
கைமாறென்ன செய்திடுவோம் (நாம்) 2
ஊனுடல் தந்த இயேசுவுக்கு
உவந்திட என்ன தந்திடுவோம் (அவர்) 2
இறைவன் நமது தந்தை என்று வாழ்வது நமது காணிக்கை -2
இயேசு வாழ்வின் ஒளியென காட்டி பகர்வது இதய காணிக்கை -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு