உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே மரியின் திருமகனே

உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே
மரியின் திருமகனே
ஒளி பிறந்தது வழி திறந்தது
அருள் சுரந்தது இருள் பறந்தது (2)

1. உலகம் முழுவதும் உனது வடிவம்
எதிலும் உன் வதனம்
இறையே வா நெஞ்சில் உறைந்திடவே
கறைகள் மறைந்திடவே
இதயக் குடிலில் உதயம் தரவே
குடிலில் உதித்தவனே

2. வறுமை எளிமை உனது வசந்தம்
கருணை உன் மகுடம்
மலரே வா கையில் தவழ்ந்திடவா
புனிதம் மணம் தரவே
இருண்ட உலகம் ஒளியைப் பெறவே
இரவில் உதித்தவனே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு