திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் | Thiraatcha Setiyae Yesu Raajaa Ummodu Innainthirukkum Kilai Naangal Lyrics

திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு

குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்

வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு