சுமை சுமந்து சோர்ந்திருப்போரே வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார் 

இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்
   
துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் - 2
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே
வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மூவேளை மன்றாட்டு