ஆனந்த மழையில் நானிலம் மகிழமன்னவன் எழுகின்றார்

ஆனந்த மழையில் நானிலம் மகிழ
மன்னவன் எழுகின்றார்
ஆயிரம் நிலவொளியோ -என்னை
ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றாய்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றாய்
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிது
பண்பாடவோ என்றும் கொண்டாடவோ
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தாயோ
காற்றினிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தாயோ
எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மூவேளை மன்றாட்டு