வான்போற்றும் மலரே சூசை முனியேஎன் தெய்வத் தந்தையே என்றும்
வான்போற்றும் மலரே சூசை முனியே
என் தெய்வத் தந்தையே என்றும்
உன் அன்பு நிலையினில் ஓயாத உழைப்பினில்
உன் பாதம் நான் தொடர்வேன்
உந்தன் வாய்மை வழியினிலே என்றும் தூய்மை லீலியே
அன்பின் சிறகினில் மகிழ்ந்து நான் வாழுவேன்
1. அறநெறி வாழ்வினில் அனைவருமே
அருளினில் அகிலமும் சிறந்திடவே
உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே
உண்மையின் நெறியினில் உயர்ந்திடவே
இறை இயேசுவை கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே மாமுனியே
2. இல்லறம் நல்லறம் என விளங்க
இடர்பல ஏற்றிட துணிந்தவரே
திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே
இறைவனின் திருவுளம் அறிந்தவரே
இறை இயேசுவை கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே மாமுனியே
பீஏ ஹமஞூசுயூவிஏயூடி
Comments